மீண்டும் கார்த்தியுடன் கைகோர்க்கும் லிங்குசாமி..!
‘பையா’ வெற்றிக்குப்பின் லிங்குசாமி மீண்டும் கார்த்தியுடன் கைகோர்க்கவுள்ளார். தற்போது லிங்குசாமி சூர்யாவை வைத்து ‘அஞ்சான்’ படத்தை இயக்கி வருகிறார்.
ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து 2007-ல் வெளியான ‘பையா’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.
அதிலுள்ள பாடல்களும் ரசிகர்கள் மனதில் பெறும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை தொடங்கவுள்ளது.
’அஞ்சான்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் லிங்குசாமி இப்படத்தை எடுக்கவுள்ளார். ‘பையா’ வெற்றியைப்போல இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)


No comments :
Post a Comment